நடிகர் சிவகுமார் குடும்பம் கொரோனா நிவாரண தொகை அளித்தனர்

      நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி இணைந்து தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாவது அலையால் சிக்கி தவிக்கும் மக்களுக்கும் மற்றும் தடுப்பு பணிகளுக்காக ரூபாய் 1 கோடியை நிவாரணத் தொகையாக மான்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அளித்தனர்.

நிவாரண நிதிக்கு முதல்வரிடம் காசோலையாக நேரில் சென்று அளித்தனர். அப்போது திரு ராஜசேகர் பாண்டியனும் உடனிருந்தார்.



இந்த சூழல் மட்டுமல்லாமல் அனைத்து பேரிடர் காலத்திலும் உதவ முன்வரும் இவர்களுக்கு நமது குழுவின் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

-Receiver Team📞

Previous Post Next Post