நடப்பு நிகழ்வுகள் 22/11/2022
1. இந்தியாவின் வளர்ச்சிக்கு புதிய ஆற்றலை சேர்க்கும் விதமாக PM Rojgar Mela
ரோஸ்கர் மேலாவீன் கீழ் 71 ஆயிரம் நியமனக் கடிதங்கள் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு வழங்குதல் நாடு முழுவதும் 45 இடங்களில் 22 நவம்பர் ,2022,காலை 10:30 (வீடியோ ,கான்பரன்ஸ் மூலம் )நடைபெறும். வழங்குவோர் பிரதமர் நரேந்திர மோடி . இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் , இந்திய தேசத்தை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதில் பங்களிப்பு செய்யவும் உதவும் வகையில் ,நமது இளைஞர்கள் புதிய வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய நமது அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார் நரேந்திர மோடி.
2. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் ,செம்மொழி நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவருமான மூத்த தமிழறிஞர் அவ்வை நடராசன் (86)உடல்நலக் குறைவு,வயது மூப்பு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானார் (நவ 21). அவர் பெற்ற விருதுகள் : 2010-தமிழக அரசின் கலைமமமணி விருது ,பேரறிஞர் அண்ணா விருது 2011-மத்திய அரசின் விருது,இலங்கை ,கம்பர் கழகத்தின் 'தன்னேரில்லா தமிழ் மகன்'விருது,2018-திருக்குறள் நெறிச்செம்மல் விருது,2022-பி .எம் .மருத்துவமனையின் -வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற பல விருதுகள் பெற்று உள்ளார்.
3.நவ 21-உலக தொலைக்காட்சி தினம்.1996-ல் நவம்பர் 21-ம் தேதி நடைபெற்ற அனைத்துலக தொலைக்காட்சி கேஉத்தரங்கின் விதிமுறைப்படி ஐநா சபை நவம்பர் 21-ம் தேதியை உலகத்த தொலைக்காட்சி தினமாக அறிவித்தது .4.நவ 21-வாரணாசியிலிருந்து ஹைதராபாத் செல்லும் 'பாரத் கௌரவ் ரயில் தமிழகம் வழியாக இயக்கப்படுகிறது.சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு மாநிலங்களை இணைக்கும் வகையில் 'பாரத் கௌரவ் ரயில் ' இயக்கப்படுகிறது.
5.ஏ .டி .பி பைனல்ஸ ஆடவர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவின் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் ஆனார்.
-Bakya
Receiver Team
#PMRojgarMela #BhartGouravTrain